MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# பிராண முத்திரா

ஆயுர்வேதம் (ம) யோக சாத்திரங்களில் பத்து முக்கிய வாயுக்கள் உடலை இயக்குகிறது. அதில் முக்கியமானது பிராணன். இது சக்தி வாய்ந்த முத்திராவாகும்.

# செய்முறை:

  • சுண்டு விரல், மோதிர விரல், ஆகியவற்றின் நுனிப்பாகம் கட்டை விரலின் நுனி பாகத்தோடு இணைக்கப் பட்டுள்ளது.
  • மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

# நேரம்:

பிராணன் முழுமையாக நிறைய இந்த முத்திரையை 48 நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும். துவக்கத்தில் 15 நிமிடம் படிப்படியாக 48 நிமிடமாக உயர்த்தவும்.

# பலன்கள்:

  • சோர்வு அகலும், உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
  • பிராணனின் அளவு அதிகரிப்பதால் உடலின் சக்தி பெருகுகிறது.
  • நரம்பு தளர்ச்சி அகலும் (பக்கவாதத்திற்கு சிறந்த முத்திரை)
  • ஆழ்நிலை தியானம் கைகூடும்.
  • புத்தி கூர்மை, நினைவாற்றல் தெளிவு உண்டாகும்.
  • கண்பார்வை கூர்மையாகும்.
  • மூச்சுக்குழல் உறுதியாகும். ஆஸ்துமா அகலும்.